காவல்துறை துணை ஆணையர் மல்ஹோத்ரா,‘‘ வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து ரயில் நிலையங்கள்,மெட்ரோ நிலையங்கள், பஸ் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் மற்றும் தொழில் பாதுகாப்பு படையினரும் விழிப்பாக இருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்’’ என்றார்.டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி டிவிட்டரில் பதிவிடுகையில், இன்று (நேற்று) காலை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வெளியேற்றப்பட்டு காவல்துறையினர் சோதனை செய்தனர். இதுவரை எந்த பள்ளிகளிலும் எதுவும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவில் இருந்து மிரட்டல்
ரஷ்யாவில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒரே ஐபி முகவரி மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.