கடந்த இரண்டு நாட்கள் ரொம்பவும் கஷ்டப்பட்டோம். இங்கு வந்ததால் ஏதாவது நிவாரண முகாம் இருக்கும், நாங்கள் பத்திரமான இடத்திற்கு சென்று விடலாம் என்று நம்பிக்கை வந்துள்ளது. மேலும் அவசரமான நிலையில் பொக்லைனில் வந்தது எனக்கு பெரிய பிரச்னையாக தெரியவில்லை. நல்ல படியாக வந்து சேர்ந்து விட்டோம். ரோட்டுக்கு வந்ததே எங்களுக்கு பெரிசாக தான் இருக்கிறது. எங்களுடைய உடைமைகளை பத்திரமாக எடுத்துக் கொண்டு வந்துள்ளோம். என்னுடன் அம்மா, தங்கச்சியையும் கூட்டுக் கொண்டு வந்து விட்டேன். எங்களை பத்திரமாக அழைத்து வந்ததற்கு அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.