பெருங்குடியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை

வேளச்சேரி: பெருங்குடியில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்டு, போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை பெருங்குடி ரயில் நிலையம் அருகே, நேற்று மாலை சுமார் 45 மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. இதை பார்த்த அப்பகுதியினர், தரமணி போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்து கிடந்தவர் பற்றி‌ எந்த தகவலும் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரிக்கின்றனர்.

Related posts

பர்படாஸில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து தவிப்பு

தீபாவளி முன்பதிவு – காலியான டிக்கெட்டுகள்

விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட்