ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கத்திற்கும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 61 நாட்கள் மீன்பிடி தடைகாலமாக தமிழக அரசு அறிவிக்கிறது. இதன்படி இந்தாண்டு கடந்த ஏப்.15 முதல் ஜூன் 14ம் தேதி நள்ளிரவு வரை மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி 61 நாட்களும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல், தங்கள் படகுகளை கரையில் இருந்து, கடலில் குறிப்பிட்ட தொலைவில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
படகு உரிமையாளர்கள் கடல் அலைகள், கடல் நீரால் படகுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என, அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர். மேலும், சேதமடைந்த படகுகளை கடற்கரையோரத்திற்கு கொண்டு வந்து, பணியாளர்கள் மூலம் சீரமைக்கின்றனர். இதன்படி, மண்டபம் கடலோரப் பகுதியில் 400க்கும் மேற்பட்ட படகுகளை மீனவர்களை சீரமைத்தும், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை சேகரித்தும், வரும் 15ம் தேதி மீன்பிடிக்க செல்ல தயார் செய்து வைத்துள்ளனர். ஜூன் 15ம் தேதி கடலுக்குச் செல்ல உள்ளனர்.