சேதுபாவாசத்திரம் அருகே படகு கவிழ்ந்து கடலில் விழுந்த மீனவர் உயிரிழப்பு..!!

தஞ்சை: சேதுபாவாசத்திரம் அருகே படகு கவிழ்ந்து கடலில் மாயமான மீனவர் சடலம் மீட்கப்பட்டது. கஜினி முகமது தனது சொந்த நாட்டுப் படகில் காமராஜ் என்பவருடன் நேற்று கடலுக்குச் சென்றுள்ளார். சூறைக்காற்று காரணமாக நாட்டுப் படகு கவிழ்ந்ததில் இருவரும் கடலில் தவறி விழுந்துள்ளனர். கடலில் விழுந்த மீனவர் காமராஜ் நீந்தி கரைக்கு வந்த நிலையில் கஜினி முகமது மாயமானார். கஜினியை சக மீனவர்கள் தேடிய நிலையில் புதுக்கோட்டை கிருஷ்ணாஜிபட்டினம் கடல் பகுதியில் உடல் மீட்கப்பட்டது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது