கரைக்கு கொண்டு வரப்பட்ட ஏற்றுமதி ரக மீன்களான கொடுவா, வாவல், வஞ்சிரம், இறால், நண்டுகளை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து வாங்கினர். வஞ்சிரம் கிலோ ரூ.1,400, வாவல் ரூ.950, விளைமீன் ரூ.550, பாறை ரூ.450, நண்டு ரூ.600, இறால் ரூ.350 முதல் ரூ.500 வரை, கனவா ரூ.250 முதல் ரூ.450 வரை, சங்கரா ரூ.350, கொடுவா ரூ.600, கடல் விரா ரூ.670, ஊளி ரூ.450க்கு விற்பனை செய்யப்பட்டது. தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்றபோது அதிகளவில் மீன்கள் சிக்கியதாலும், உரிய விலை கிடைத்ததாலும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.