8ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு 9ம் வகுப்பில் சேர இடம் வழங்கப்படவில்லை. மாணவர் சேர்க்கையும் குறைவாக உள்ளதும் கண்டறியப்பட்டது. அதே நேரத்தில் சேலம் மாவட்டம் ஓடைக்காட்டுபுதூர், கொடுங்கல், இராமன்பட்டி ஆகிய அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளியில் முறையே 135, 102 மற்றும் 75 மாணவர்கள் கல்வி கற்று வருவருகிறார்கள். இதையடுத்து, அந்த பள்ளி மாணவர்களின் நலன் கருதி காலியாக உள்ள ஓடைக்காட்டுபுதூர் பள்ளிக்கு மணிவண்ணன் என்ற பட்டதாரி ஆசிரியரையும், கொடுங்கள் பள்ளிக்கு அலமேலு என்ற பட்டதாரி ஆசிரியரையும், இராமன்பட்டி பள்ளிக்கு மணிகண்டன் என்ற ஆசிரியரையும் இடமாற்றம் செய்து பழங்குடியினர் நல இயக்குநர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட 3 ஆசிரியர்களும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணையின்போது, மாணவர்களின் நலன் கருதியே இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.