இந்நிலையில், வரும் ஏப்.1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை மற்றும் நாள் முழுவதும் கூடுதல் மின்சாரம் செய்வதற்கான அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலுக்காக மார்ச் முதல் மே மாதம் வரை தினமும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை 2 ஆயிரம் மெகாவாட்டும், 2024 ஏப்ரல் மாதம் மட்டும் காலையில் தினமும் 500 மெகாவாட்டும் மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக ஏற்கனவே டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது கோடை காலங்களில் அதிகப்படியான மின் பயன்பாடு இருக்கும் . அதற்காக மின்சாரம் கொள்முதல் செய்யவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது. மத்திய மற்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழக நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாட்டை தவிற மற்ற மாநிலங்களை சேர்ந்த நிறுவனங்கள் இந்த டெண்டரில் பங்கேற்கும்.