இத்துயரச் சம்பவம் குறித்து அப்பெண் பயணியின் மகன் ஆயுஷ் கெஜ்ரிவால் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “விஸ்தாரா ஏர்லைன்ஸ், பார்வையற்ற எனது அம்மாவை எப்படி இப்படியொரு இக்கட்டான சூழலில் தள்ள முடியும்? உங்கள் மேற்பார்வையிலும் உதவியிலும் விடப்படும் மாற்றுத்திறனாளி பயணிகளை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுடையது இல்லையா? அதிர்ச்சியாக இருக்கிறது,” என்று கூறியுள்ளார். இதற்கு வருத்தம் தெரிவித்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் அதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பதிவில்,” எங்களுடனான உங்கள் சமீபத்திய அனுபவத்தைப் பற்றி அறிந்து மிகவும் வருந்துகிறோம் , ”என்று தெரிவித்துள்ளது.