இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு வெளியே குண்டுவெடித்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் பிப்.8-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் குண்டுவெடிப்பால் பதற்றம் நிலவி வருகிறது. தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு வெளியே நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.