மேலும் அந்த வீடியோவில், ‘ஜெயின் சமூக மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக, கடந்த சில தினங்களுக்கு முன் டேனியல் பெர்னாண்டஸ் வீடியோ வெளியிட்டார். எனவே டேனியல் பெர்னாண்டஸ் தனது ‘ஸ்டாண்ட்-அப்’ கமெடி நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் அல்லது எங்களது கட்சியினரின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டும்’ என்று கூறினார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, அந்த ஓட்டலுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘அந்த ஓட்டலில் தனியார் அமைப்பாளரால் ‘ஸ்டாண்ட்-அப்’ கமெடி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களின் நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து அவர்கள் எங்களிடம் முன்பே தெரிவிக்கவில்லை. முன்அனுமதி பெறாததால், அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது’ என்றார். ஏற்கனவே கடந்த 2022 ஆகஸ்ட்டில் மற்றொரு ஸ்டாண்ட்-அப் நடிகர் முனாவர் ஃபரூக்கியின் நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ ராஜா சிங் எதிர்ப்பு தெரிவித்தால், அந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.