பாஜ நிர்வாகி சுட்டு கொலை தலைமறைவான நண்பர் கைது

செங்கம்: பாஜ நிர்வாகி சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவான நண்பர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜவ்வாதுமலை அடிவாரம் கோயில் கொள்ளை என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(27), பாஜ தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி. இவரும் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான காசி, ஜெயராமன் உட்பட 8 பேர் வனவிலங்குகளை வேட்டையாட கடந்த 8ம் தேதி இரவு ஜவ்வாதுமலை வனப்பகுதிக்கு சென்றவர்கள் மாயமாகினர். அவர்களை நேற்று முன்தினம் போலீசார் தேடி சென்றுபோது திருப்பத்தூர் வனப்பகுதியை ஒட்டிய மீன்மடுவு பகுதியில் உடலில் குண்டு காயங்களுடன் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் ஏழுமலையின் சடலத்தை மீட்டனர். இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் அவருடன் சென்ற காசி, ஜெயராமன் உளிட்ட 7 பேர் மற்றும் அவர்களது செல்போன் குறித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் விழுப்புரம் பகுதியில் பதுங்கி இருந்த காசியை (58) நேற்று மாலை தனிப்படை போலீசார் கைது செய்து செங்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு