செங்கல்பட்டு: பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி ஜாமின் மனுவை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில் பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார். அமர்பிரசாத் ரெட்டி தாக்கல் செய்த ஜாமின் மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா அமர்பிரசாத் ரெட்டி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.