பாஜவுடன் கூட்டணியால் 80 ஆயிரம் ஓட்டு போச்சு… கதறி அழுத அதிமுக முன்னாள் எம்பி

திருச்சி: திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் தலைமையில் நடந்தது. அப்போது குமார் பேசுகையில், ‘‘இந்த பாஜவுடன் கூடா நட்போடு சென்ற காரணத்தினால் 80 ஆயிரம் வாக்குகள் இந்த தொகுதியிலே மைனஸ்சாக இருந்தது. 9 சட்டமன்ற தொகுதியில் நம்முடைய தெற்கு தொகுதியில், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் கீழே இருந்து பார்த்தால் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அதேபோல் லால்குடி. இப்படி படிப்படியாக இன்று நாம் பார்க்கும்போது, கீழே இருந்து வரும்போது 6வது இடம்’’ என்று கூறி கதறி அழுதார்.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா