மொத்தமுள்ள 13 தொகுதிகளில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 7 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி 3 தொகுதிகளில் வெற்றி பெற்று ஒரு தொகுதியில் முன்னிலையில் இருந்தது. சிரோமணி அகாலி தளம் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. இரண்டு தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வென்றனர்.காதூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளரான சீக்கிய பிரிவினைவாதி அம்ரித் பால் சிங் வென்றார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக்கொன்ற இரண்டு பேரில் ஒருவரான பியாந்த்சிங்கின் மகன் சரப்ஜித் சிங் கல்சா பரித்கோட் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.