அந்த வரைபடத்தில் இந்தியாவின் பகுதிகள் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஒரு பகுதியாக காட்டப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் சாடி உள்ளது. வரைபட பிழையை சுட்டிக் காட்டிய பின்னர், குறிப்பிட்ட காட்சியை இணையதளத்தில் இருந்து பாஜகவினர் நீக்கிவிட்டதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது இந்திய பிராந்திய ஒருமைபாட்டின் மீதான தாக்குதல் என்று கூறியுள்ள காங்கிரஸ், நிகழ்ந்த தவறுக்கு பாஜக தலைவர் ஜே.பி.நாட்டவும் பிரதமர் மோடியும் இந்திய மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.