பாஜ , தெலுங்குதேசம், ஜனசேனா கூட்டணி? நள்ளிரவில் அமித்ஷாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு

திருமலை: ஆந்திர மாநிலத்தில் விரைவில் 175 சட்டபேரவை தொகுதிக்கும், 25 மக்களவை தொகுதிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி பாஜகவுடன் கூட்டணியில் இருந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்றுமுன்தினம் டெல்லி சென்றார். நள்ளிரவு 11.25 மணிக்கு அமித்ஷாவின் இல்லத்திற்கு சந்திரபாபு நாயுடு சென்றார்.

அங்கு அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருடன் சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தெலுங்குதேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. விரைவில் தேர்தல் கூட்டணி குறித்து கூட்டு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே சந்திரபாபு நேற்று காலை டெல்லியில் இருந்து ஐதராபாத்திற்கு புறப்பட்டார். இந்நிலையில் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் நேற்று இரவு டெல்லி சென்று அமித்ஷா, ஜே.பி.நட்டாவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

2 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் ஜம்மு – காஷ்மீரில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு: 40 பதவிக்கு 415 வேட்பாளர்கள் போட்டி

3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள் மீது தாக்குதல்; டாக்டர்கள் மீண்டும் தீப்பந்தம் ஏந்தி பேரணி: கொல்கத்தாவில் பதற்றம்

நாகர்கோவிலில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய அரசு பஸ்: கடும் போக்குவரத்து நெரிசல்