ஓரிரு நாட்களில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
அதிமுகவுக்கு எதிராகவும் பாஜகவுக்கு ஆதரவாகவும் வேலை செய்த நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி வீட்டிலேயே இருந்து வந்தார். இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை பெருந்துறை புறப்பட்டு சென்றார். அங்கு பேத்தியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுவிட்டு மீண்டும் சேலம் திரும்பினார். இன்று காலை 10 மணிக்கு சேலம் மாநகர், புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கிறது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.