ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் சிபிசிஐடி போலீஸ் துருவித் துருவி விசாரணை

சென்னை: ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் சிபிசிஐடி போலீஸ் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்.ஆர்.சேகர் ஆஜரானார். ஏற்கனவே கோவையில் உள்ள எஸ்.ஆர்.சேகர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தியிருந்தனர். கடந்த ஏப்.6-ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

நடிகர் விஷால் வழக்கு முடித்துவைப்பு

உலகிற்கு வழிகாட்டும் அறச்சிந்தனையை தமிழ் அறிஞர்களின் எழுத்துகள்தான் தந்தன: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பெருமிதம்

இலங்கை அதிபர் தேர்தல் ரணில் விக்ரம சிங்கேவுக்கு ஆதரவளித்தால் ஒழுங்கு நடவடிக்கை: ராஜபக்சே கட்சி எச்சரிக்கை