இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே கனோட்டாவில் நடைபெற்ற ‘ராமரத் அயோத்தி யாத்ரா தர்ஷன் பூஜான் சமரோ’ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமார், “பா.ஜ.க.வின் ஆணவப்போக்கால் அக்கட்சியை ராமர் தண்டித்துவிட்டார். ராமர் மீது பக்தி கொண்டிருந்தவர்கள் படிப்படியாக ஆணவக்காரர்களாக ஆகிவிட்டனர்.ராமரின் பக்தர்கள் பணிவுடன் இருக்க வேண்டும். ராமர் மக்களையும் காப்பாற்றி, ராவணனுக்கும் உதவியவர் என்பதை மறக்க கூடாது. பா.ஜ.க.வில் உட்கட்சி ஜனநாயகம் என்பதே ஒழிக்கப்பட்டுவிட்டது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான நேரம் சரியானதல்ல என்று பெரும்பாலான சாதுக்கள், துறவிகள் கூறினார்கள். சாதுக்கள், துறவிகளின் கருத்தை மோடி புறந்தள்ளிவிட்டார்,”இவ்வாறு தெரிவித்தார். பாஜக பெயரை இந்திரேஷ் குமார் குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்தாலும் பாஜக தலைவர்கள் கடும் கொந்தளிப்புடன் இருப்பதாக கூறப்படுகிறது.