மூன்றாவது முறையாக பாஜ வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் நாட்டில் தேர்தலே நடைபெறாது.
அரசியல் கட்சிகளே இருக்காது. அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் மூலம் நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்குகிறது. பாமக கட்சியாக துவங்கும் போது, ராமதாஸ் கொடுத்த வாக்குறுதிகளை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். பாமக இன்று பாஜவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. மண்டல் குழு பரிந்துரையை அமல்படுத்துவேன் என கூறிய விபி சிங் கட்சியை பாஜ கவிழ்த்தது என்பதை நாடறியும். அப்படிப்பட்ட கட்சியோடு எந்த அடிப்படையில் அணி சேர்ந்தது என பதிலளிக்க வேண்டியது ராமதாசின் கடமை. இந்த கூட்டணி நள்ளிரவு கூட்டணியாகும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். 3வது முறை மோடி பிரதமர் என்ற கனவு சரிந்து போய்விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.