பெங்களூரு: பாஜக ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாவது பல ஐயங்களை எழுப்பியுள்ளது என நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீசிய சம்பவம் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார். நல்வாய்ப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பாக இருப்பது நிம்மதி அளிக்கிறது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.