மீண்டும் ஒருமுறை நந்தனாரை தீயிட்டு கொளுத்தியதுபோல் அந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஆளுநர் ரவி ஆளுநர் வேலையை தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்து வருகிறார். அவர் சனாதனத்தையும், புரிந்து கொள்ளவில்லை வள்ளலாரையும் புரிந்து கொள்ளவில்லை. அவர் ஒரு ஆர்எஸ்எஸ் தலைவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் இந்து சமய அறநிலைத்துறை உருவாக்கப்பட்டது.
புதுச்சேரியில் அரசின் கட்டுப்பாட்டில் கோயில் நிலங்கள் இருக்கும்போதே, காமாட்சி அம்மன் கோயிலுடைய நிலத்தை இரண்டு பாஜக எம்எல்ஏக்கள் மோசடியாக கிரயம் செய்துள்ளார்கள். நாடு முழுவதும் மத மோதல்களை உருவாக்குவது, எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது ரெய்டு நடத்துவது, கைது செய்வது போன்ற செயலில் பாஜ ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.