மும்பை: சிவசேனா ஷிண்டே பிரிவு முன்னாள் கவுன்சிலர் மகேஷ் கெய்க்வாட்டை பாஜக எம்எல்ஏ கணபதி கெய்க்வாட் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பை அல்காஸ் நகர் காவல்நிலையத்தில் வெவ்வேறு பிரச்சனைக்களுக்காக இருவரும் புகாரளிக்க வந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக எம்எல்ஏ கணபதி கெய்க்வாட்டுக்கும் ஷிண்டே பிரிவு சிவசேனா முன்னாள் கவுன்சிலர் மகேஷ் கெய்க்வாட்டுக்கும் இடையே பிரச்சனை இருந்தது தெரியவந்தது. மராட்டிய முதலமைச்சர் ஷிண்டே கட்சி நிர்வாகியை கூட்டணி கட்சியான பாஜக எம்எல்ஏ சுட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. துப்பாக்கியால் சுடப்பட்ட முன்னாள் கவுன்சிலரின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.