பாஜக பிரமுகரின் கணவருக்கு வெட்டு – 2 பேர் சரண்

சென்னை: திருமங்கலத்தில் பாஜக பிரமுகரின் கணவர் வெட்டப்பட்ட சம்பவத்தில் மேலும் இருவர் சரணடைந்தனர். மகளிர் அணி நிர்வாகி நதியாவின் கணவர் சீனிவாசன் கடந்த 14-ம் தேதி ஓட ஓட விரட்டி வெட்டப்பட்டார். வழக்கில் தேடப்பட்டு வந்த பாலாஜி என்பவர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மற்றொரு நபர் கார்த்திகேயன் என்ற சின்ன அப்பு திருமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். வழக்கில் சவுகார்பேட்டையைச் சேர்ந்த பிரசாந்த் உட்பட 5 பேர் மறுநாளே சரணடைந்தனர்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது