கந்து வட்டி: பாஜக நிர்வாகி மகள் மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னையில் திருநங்கைகளிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டிய பாஜக மாவட்ட மகளிர் அணி செயலாளர் மகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வடசென்னை பாஜக மேற்கு மாவட்ட மகளிரணி செயலாளரும், ரவுடியுமான புளியந்தோப்பு அஞ்சலை மகள் தமிழரசி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புளியந்தோப்பு அஞ்சலை மகள் தமிழரசி, அவரது கணவர் டாட்டு மணி மீது கந்துவட்டி தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புளியந்தோப்பு அஞ்சலை ஏற்கனவே கந்துவட்டி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நிலையில் அவரது மகள், மருமகன் கைது செய்யப்பட்டனர். கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக திருநங்கைகள் கொடுத்த புகாரின் பேரில் புளியந்தோப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

Related posts

கோவையில் 4 பேர் கும்பல் வெறிச்செயல் மர்ம உறுப்பை துண்டித்து வக்கீல் கொடூர கொலை: பெண் விவகாரமா? போலீஸ் விசாரணை

பாதயாத்திரை கூட்டத்தில் லாரி புகுந்து 3 பக்தர்கள் பலி

தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை 100% ஆகும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி