ஒன்றிய பாஜக அரசை கண்டித்து விசிகவினர் ஆர்ப்பாட்டம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய பாஜக அரசை கண்டித்து விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பெரியபாளையம் பேருந்து நிலையம் முன்பு, இந்தியா கூட்டணியில் 142 எம்பிக்கள் இடைநீக்கம் செய்தும், நாடாளுமன்ற பாதுகாப்பற்ற நிலையில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்த பாஜக அரசைக் கண்டித்தும், பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

கும்மிடிபூண்டி தொகுதி செயலானர் ஜீவா, மாவட்ட நிர்வாகி கிங்பால் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட நிர்வாகிகள் ராள்ளைபாபு, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் நாகராஜ், தளபதி அருள், ராவணன் வித்யாபதி, காட்வின் கிறிஸ்டோபர், ரஞ்சன், பால்ராஜ், ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நீலமேகம் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்பாட்டத்தில், கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் பாஜக மோடி அரசை கண்டிக்கிறோம் என பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இறுதியில் ஒன்றிய பொருளாளர் மணிவளவன் நன்றி கூறினார்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு