கும்மிடிபூண்டி தொகுதி செயலானர் ஜீவா, மாவட்ட நிர்வாகி கிங்பால் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட நிர்வாகிகள் ராள்ளைபாபு, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் நாகராஜ், தளபதி அருள், ராவணன் வித்யாபதி, காட்வின் கிறிஸ்டோபர், ரஞ்சன், பால்ராஜ், ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நீலமேகம் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்பாட்டத்தில், கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் பாஜக மோடி அரசை கண்டிக்கிறோம் என பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இறுதியில் ஒன்றிய பொருளாளர் மணிவளவன் நன்றி கூறினார்.