மக்களவைத் தேர்தல்: பாஜக – பாமக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி?

சென்னை: மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக – பாமக இடையே பேச்சுவார்த்தையில் இழுபறி எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக, பாஜ கூட்டணி முறிந்த பிறகு அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் யாருடனும் சேராமல் உள்ளனர். பாஜ மற்றும் அதிமுக முன்னணி தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனிடையே அதிமுக – பாஜக – பாமக கூட்டணியை ஒருங்கிணைக்க ஜி.கே.வாசன் பேசி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாஜக – பாமக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி என தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணியில் 12 மக்களவைத் தொகுதிகளையும், ஒரு ராஜ்ய சபா இடத்தையும் பாமக கேட்டுள்ளது. பாமகவுக்கு 7 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய பாஜக முன்வந்ததாக கூறப்படுகிறது. பாஜக ஒதுக்கும் தொகுதிகளை பாமக ஏற்க முன்வராததால் ஜி.கே.வாசன் நடத்திய பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு