புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி மக்களவை தொகுதி பாஜவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று. விரைவில் வேட்பாளரை பாஜ அறிவிக்கும். பிரசாரம் செய்ய பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வருவார்.
போதை பொருள் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெண் குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களது வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யும் திட்டம் சரியாக நடந்து வருகிறது. இத்திட்டம் சரியாக சென்றடையவில்லை என கூறும் குற்றச்சாட்டு பொய்யானது’ என்றார்.