இலங்கைக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கினீர்கள். அப்போது கச்சத்தீவை ஏன் திருப்பிக் கேட்கவில்லை. தேர்தலுக்காகத்தான் நீங்கள் இப்போது நாடகம் ஆடுகிறீர்கள். எங்கெல்லாம் பாஜக நிற்கிறதோ, திமுகவை எதிர்த்து நிற்கிறதோ, குறிப்பாக அதிமுக சார்பாக கூட்டணி கட்சிகள் நிற்கிறதோ, அங்கெல்லாம் அதிமுக நிர்வாகிகள் வேலை செய்வதில்லை. ஏன் மத்திய சென்னையைப் பொறுத்தவரையில் தேமுதிக வேட்பாளர் நிற்கிறார். அவருக்கு யாரும் வேலை செய்யாமல் மறைமுகமாக அனைத்து அதிமுக நிர்வாகிகளும் பாஜகவுக்குத்தான் வேலை செய்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் கள்ளத் தொடர்பு இருக்கிறது என்று தெரிகிறதல்லவா?. டிடிவி தினகரன் இப்போது பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறார். இதற்கு முன் எங்கு இருந்தார்? சசிகலா முன்பு எங்கு இருந்தார்? அமெரிக்காவிலா இருந்தார்கள்? ஜெயிலில் தான் இருந்தார்கள்.
மகாராஷ்டிராவில் இருக்கிற விஎச்பி தலைவர்கள் ஜெயிலில் தான் இருந்தார்கள். இப்போது மந்திரியாக இருக்கிறார்கள். அதேபோல் மேற்கு வங்கத்தில் இருந்த முன்னாள் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் ஜெயிலில் இருந்தார்கள். இப்போது வெளியில் இருக்கிறார்கள். இப்போது அவர்களுக்குத் தேவை என்றால் எல்லோரும் ஜெயிலில் இருந்து வெளியில் வருவார்கள். நிர்மலா சீதாராமனே சொல்கிறார், யார் மீதும் சிபிஐயோ ஈடி யோ இருந்தாலும் எங்கள் கட்சிக்கு அவர்கள் வந்தால் நிர்மா பவுடர் போட்டு சுத்தம் செய்து விடுவோம் என்று சொல்கிறார்.இவ்வாறு அவர் கூறினார். பிரசாரத்தின் போது சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு, பகுதி செயலாளர் மா.பா. அன்புதுரை உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.