சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமாகா வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜ தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. எனவே, நாடாளுமன்ற தொகுதிகள், எண்ணிக்கைகள் குறித்து பாஜவுடன் பேச்சுவார்த்தை நடத்த தமாகாவின் தேர்தல் பங்கீட்டு குழு அமைத்து அறிவிக்கப்படுகிறது. அதன்படி, தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவில், முன்னாள் எம்.பி பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், முன்னாள் எம்எல்ஏ விடியல் எஸ்.சேகர், பொதுச்செயலாளர் சக்திவடிவேல், முன்னாள் எம்எல்ஏ ரெங்கராஜன், பொதுச்செயலாளர் ஏ.எஸ்.முனவர் பாஷா, முன்னாள் எம்எல்ஏ கே.வி.ஆர்.ராம்பிரபு ஆகியோர் உள்ளனர்.