சென்னை: ராகுல் காந்திக்கு பா.ஜ.க. தலைவர்கள் மிரட்டல் விடுப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திரா காந்தி போலவே ராகுல் கொல்லப்படுவார் என்று பா.ஜ.க.வினர் மிரட்டல் விடுத்தது அதிர்ச்சி அளிக்கிறது. ஜனநாயக நாட்டில் மிரட்டல், வன்முறைக்கு இடமில்லை என்பதை மீண்டும் உறுதிசெய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.