கடந்த 4 மாதம் தவணை செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதனையடுத்து சங்கரை நேற்று தனது அலுவலகத்திற்கு வருமாறு சதீஷ்குமார் அழைத்தார். அதன்பேரில் அலுவலகம் வந்தார். அப்போது தவணை செலுத்தாதது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், அலுவலகத்தின் ஷட்டரை மூடி சாதி பெயரை கூறி சங்கரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் அவர் படுகாயம் அடைந்த சங்கர், காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின்பேரில் காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வன்கொடுமை, கொலை மிரட்டல், சாதி பெயரை கூறி திட்டுதல் மற்றும் தாக்குதல் என 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.