மேடை சரிந்த சம்பவத்தில் காயமின்றி தப்பிய பாஜக அமைச்சர்: 5 பேர் படுகாயத்துடன் அட்மிட்

ஜெய்ப்பூர்: மேடை சரிந்த சம்பவத்தில் ராஜஸ்தான் பாஜக அமைச்சர் காயமின்றி தப்பினார். ஆனால் 5 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பாஜக மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில அமைச்சருமான ஹிராலால் நாகர், தேர்தலில் வெற்றி பெற்ற பின் முதல் முறையாக தனது தொகுதிக்கு வந்தார். அமைச்சருக்கு சங்கோட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் அமைச்சர் ஏறினார்.

ஆனால் அதற்கு முன்பாகவே ஏராளமானோர் மேடையில் அமர்ந்தும், நின்றும் இருந்தனர். அமைச்சர் மேடையேறிய அடுத்த சில நிமிடங்களில் எடை தாங்காமல் மேடை சரிந்தது. அப்போது மேடையில் இருந்த அமைச்சர் ஹிராலாலும் விழுந்தார். ஆனால் அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. அதேநேரம் பாஜகவைச் சேர்ந்த ஜெய்வீர் சிங், மகேந்திர சர்மா, மனோஜ் சர்மா, சந்திர பிரகாஷ் சோனி ஆகியோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அமைச்சர் ஹிராலால் பார்த்து ஆறுதல் கூறினர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி