மதுரை: பாஜக மதுரை கிழக்கு மாவட்ட தலைவர், செயலாளர்கள் உட்பட 160பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தை கண்டித்து அனுமதியின்றி போராடியதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.