பாட்னா: பாஜக வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை பரப்பி, நாட்டை பிளவுபடுத்த நினைக்கிறது, நாங்கள் அன்பை பரப்பி, அனைவரையும் ஒன்றிணைக்க முயல்கிறோம் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் கந்தி கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் அனைவரும் இன்று இங்கு வந்துள்ளோம், அனைவரும் ஒன்று சேர்ந்து, பாஜகவை வீழ்த்துவோம் என பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன், காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.