பாஜக நிர்வாகி காலாவதியான மருந்து விற்றதாக வழக்கு..!!

சென்னை: காலாவதியான மருந்து விற்றதாக தென் சென்னை பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பா.ஜ.க. மாவட்ட தலைவர் காளிதாஸ், அவரது மனைவி மீது சைதை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஒன்றிய அரசின் மலிவு விலை மருந்து திட்டத்தின் கீழ் மக்கள் மருந்தகத்தை சைதாப்பேட்டையில் காளிதாஸ் நடத்தி வருகிறார். கடையில் காலாவதியான மருந்துகள் விற்பதாகவும் விதிமீறல் நடப்பதாகவும் மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு பல புகார்கள் வந்தன. புகாரின் மீது மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் காலாவதியான மருந்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

 

Related posts

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு பாஜக பொருளாளர் ஆஜராக ஆணை

செல்போன் கட்டண உயர்வை ஒரே மாதிரியாக அறிவித்தது எப்படி?.. செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி சுமை: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!

வரதட்சணை கொடுமை வழக்கில் 7 ஆண்டு சிறை..!!