சசிகலாவுக்கும் நன்றி இல்லாமல் இருந்தார். நான்காண்டு காலம் பாஜ தயவில் ஆட்சியை நடத்தி வந்தார். தற்போது அவர்களுக்கும் எடப்பாடி உண்மையாக இல்லை என்பது புரிந்திருக்கும். ஒன்றியத்தில் தேசிய கட்சிகள் ஆட்சி அமைந்தாலும் மாநிலத்தின் உரிமைகளுக்கு மாநில கட்சிகள் தான் போராட முடியும். அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலிலும் மாநில கட்சிகளுக்கு ஆதரவளிக்கும்போது தான் மக்கள் பிரச்னைகளை தட்டிக் கேட்க முடியும். இரட்டை இலை மட்டும் இல்லையென்றால் எடப்பாடி தலைமையிலான அதிமுக மூட்டையிலிருந்து கொட்டப்படும் நெல்லிக்காய் போல் சிதறும். இவ்வாறு கூறினார்.