இந்நிலையில் அரசியலில் இருந்தே விலகுவதாக ஹர்ஷ் வர்தன் நேற்று அறிவித்தார். இதுகுறித்து ஹர்ஷ் வர்தன் தன் ட்விட்டர் பதிவில், “30 ஆண்டுகளுக்கும் மேல் அரசியலில் பயணித்துள்ளேன். 5 சட்டப்பேரவை, 2 மக்களவை தேர்தல்களில் பெரும் வாக்கு வித்தியாசங்களில் வெற்றி பெற்றுள்ளேன். பாஜ கட்சியிலும், மாநில, ஒன்றிய அரசுகளிலும் பல மதிப்புமிக்க பதவிகளை வகித்துள்ளேன். நான் மீண்டும் டாக்டர் தொழிலை கவனிக்க உள்ளேன்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.