அங்கு தான் சார்ந்த சமூக வாக்கும், மனைவி ராதிகா சார்ந்த தெலுங்கு ஓட்டும் அதிகமாக உள்ளதால், அந்த தொகுதி வேண்டும் என்றார். அங்கு பாஜகவின் ராமசீனிவாசன் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்கான வேலைகளையும் தொடங்கியிருந்தார். கடைசியில் கூட்டணியில் சரத்குமார் சேர்ந்ததால், அவரது மனைவி ராதிகாவை அங்கு நிறுத்த முடிவு செய்துள்ளார்.
இந்த முடிவால் ஒரு வாரமாக ராமசீனிவாசன் கடும் அப்செட்டாம். அதேநேரத்தில் வெள்ளைச் சட்டை போட்டு வந்தாலே நம்மை விட நல்ல வளர்ந்திடுவானோ என்று தடுக்க முயற்சிக்கும், அண்ணாமலை, ராமசீனிவாசனை எப்படி வளரவிடுவார் என்கின்றனர் பாஜகவினர்.