பாஜக காண்பது பகல் கனவு.. தலைவர்களை புகழ்ந்து பேசுவதால் அதிமுக வாக்குகளை பாஜக பெறமுடியாது: செல்லூர் ராஜு விமர்சனம்!!

மதுரை: தலைவர்களை புகழ்ந்து பேசுவதால் அதிமுக வாக்குகளை பாஜக பெற்றுவிட முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; பாஜக காண்பது பகல் கனவு. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரைச் சொன்னால் அதிமுக வாக்குகள் கிடைக்கும் என பாஜக தப்புக்கணக்கு போடுகிறது. தலைவர்களை புகழ்ந்து பேசுவதால் அதிமுக வாக்குகளை பாஜக பெற்றுவிட முடியாது.

மேலும், அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள் மதவாத இயக்கமான பாஜகவுக்கு எப்போதும் வாக்களிக்க மாட்டார்கள். திராவிட பூமியில் மதத்தை பரப்புகிற, ஒரு மதத்துக்கு மட்டுமே சார்பாக உள்ள பாஜகவை மக்கள் ஏற்க மாட்டார்கள். அதிமுகவைவிட பாஜக வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பதாக கூறுவதில் கொஞ்சமும் உணமையில்லை. தமிழ்நாட்டில் பாஜக வளர்வதற்கான சூழல் இப்போதும் இல்லை; எப்போதும் வராது. பாஜக எப்போதும் வளரவே முடியாது என்பதே தமிழ்நாட்டின் சூழல். பாஜகவுக்கு வரும் கூட்டம், அழைத்து வரப்படும் கூட்டம்; அது காக்கா கூட்டம்; கலைந்து போய்விடும் என்று அவர் கூறியுள்ளார்.

 

Related posts

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு