எடப்பாடி பழனிசாமி தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழ்நாட்டில் உள்ள 13 விழுக்காடு சிறுபான்மையினர் வாக்குகளில் 1% வாங்குவதே பெரிய விஷயம் என்று ராம சீனிவாசன் கூறியிருந்தார். 2019, 2021 தேர்தல்களில் பாஜக உடன் கூட்டணி வைத்து கொண்டு இப்போது பசுந்தோள் போர்த்திய புலி போல போனால் நம்பிவிட மக்கள் முட்டாள் இல்லை என்றும் அதிமுகவை அவர் விமர்சித்திருந்தார். இந்நிலையில், ராம சீனிவாசன் பாஜகவை கண்டித்து சிவகங்கை மாவட்டம் திருபுவனம், மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் பாஜக எனும் பூனையின் உருட்டலுக்கு எலி வேண்டும் என்றால் பயப்படலாம் அதிமுக எனும் புலி பயப்படாது என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.