மேற்குவங்கத்தில் பத்திரிகையாளர் சகரிகா கோஷ், முன்னாள் எம்பி சுஷ்மிதா தேவ் (காங்கிரசில் இருந்து திரிணாமுல் கட்சிக்கு வந்தவர்) உள்ளிட்ட 4 பேர் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்றனர். மீதமுள்ள ஒரு இடத்தில் பாஜக சார்பில் சாமிக் பட்டாச்சார்யா போட்டியிடுகிறது. ஏற்கனவே இந்த ஒரு இடம் காங்கிரசிடம் இருந்தது. தற்போது அந்த இடம் பாஜகவுக்கு செல்கிறது.
பாலிவுட் நடிகை ஜெயா பச்சன், சமாஜ்வாதி கட்சியின் பிரதிநிதியாக மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாக வாய்ப்புள்ளது. அவர் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.