Thursday, June 27, 2024
Home » பிட் காயினில் முதலீடு விவகாரம் ரியல் எஸ்டேட் அதிபரின் மண்டை உடைப்பு: நடிகை ராதாவிடம் போலீசார் விசாரணை

பிட் காயினில் முதலீடு விவகாரம் ரியல் எஸ்டேட் அதிபரின் மண்டை உடைப்பு: நடிகை ராதாவிடம் போலீசார் விசாரணை

by Karthik Yash

சென்னை: பிட் காயினில் முதலீடு செய்த பணத்தை திரும்ப கொடுக்காததால், ரியல் எஸ்டேட் அதிபரை அவரது அலுவலகத்திற்குள் புகுந்து மண்டையை உடைத்த நடிகை ராதா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நெற்குன்றம் பல்லவன் நகர் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன் (48), ரியல் எஸ்டேட் அதிபராகவும் எல்ஐசி ஏஜென்டாகவும் உள்ளார். அவர் கூறியதன்படி அவரது நண்பரான துவாரகேஷிடம் நடிகை ராதா 2 ஆண்டுக்கு முன்பு ரூ.90 ஆயிரம் ‘பிட் காயின்’ முதலீடு செய்துள்ளார். ஆனால், எந்த பணத்தையும் துவாரகேஷ் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அறிமுகம் செய்து வைத்த முரளிகிருஷ்ணனிடம் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்று தர கோரி நடிகை ராதா மற்றும் அவரது குடும்பத்தினர் வலியுறுத்தினர். இந்நிலையில், சூளைமேடு பெரியார் பாதையில் நண்பரின் டிராவல்ஸ் நிறுவனத்தில் நேற்று முன்தினம் இரவு ரியல் எஸ்டேட் அதிபர் முரளி கிருஷ்ணன் இருந்துள்ளார்.

அப்போது நடிகை ராதா மற்றும் அவரது தாய் பவானி, மகன் தருண் மற்றும் 3 பேர் அங்கு வந்துள்ளனர். வெகு நேரம் பணம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதும், நடிகை ராதா, அவரது தாய் பவானி, மகன் தருண் ஆகியோர் முரளி கிருஷ்ணனை கீழே தள்ளி சரமாரியாக தாக்கி விட்டு தப்பினர். இதில் முரளி கிருஷ்ணனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் மூன்று தையல் போடப்பட்டது. இதுகுறித்து முரளி கிருஷ்ணன் வடபழனி காவல் நிலையத்தில் பிட் காயின் முதலீடு தொடர்பாக தன்னை நடிகை ராதா மற்றும் அவரது தாய், மகன் ஆகியோர் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக புகார் அளித்தார். அதன்படி வடபழனி போலீசார் நடிகை ராதா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

three × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi