ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ஆயிரம் பேருக்கு பிரியாணி

ஸ்ரீபெரும்புதூர்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணைச் செயலாளர் போந்தூர் மோகன் தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, மாவட்ட துணைச் செயலாளர் போந்தூர் செந்தில்ராஜன், மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர் இருங்காட்டுக்கோட்டை சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம், ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்எல்ஏ பழனி ஆகியோர் கலந்துகொண்டு, ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கினர். நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் திருமால், சேந்தமங்கலம் ஊராட்சி மன்றத் ஸ்ரீ லைவர் சார்லஸ், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் முருகன், சந்தவேலூர் சரவணன், காட்டரம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன், பாப்பாங்குழி விநாயகமூர்த்தி, அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு