பிறந்த நாளன்று விபரீத முடிவு கல்லூரி மாணவி தற்கொலை

நாங்குநேரி: பிறந்த நாளன்று கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள முதலைக்குளம் ஏடி காலனியைச் சேர்ந்த முருகன் மகள் சரோஜா (19). இவர் நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ தமிழ் மூன்றாம் ஆண்டு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ேதர்வு முடிவு வெளியான நிலையில், இரண்டு பாடங்கள் பெயில் ஆனதாக தெரிகிறது.

அவரை பெற்றோர் சத்தம் போட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சரோஜா வீட்டின் யாரும் இல்லாத நிலையில் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த நாளான நேற்று சரோஜா தற்கொலை செய்து கொண்டது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related posts

திருச்சி நொச்சியம் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் பாய்ந்த லாரி

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 100 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றார் அமெரிக்காவின் நோவா லைலெஸ்!

சென்னை கொளத்தூரில் ஆட்டிசம் பாதித்த சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் 2 பேர் கைது