பிறப்பு சான்றிதழில் பெயர் இடம் பெறாத பதிவுகளுக்கு சான்று பெற 2024 வரை அவகாசம்

 

சிவகங்கை, ஏப்.22: பிறப்பு சான்றிதழில் பெயர் இடம் பெறாத பிறப்பு பதிவுகளுக்கு பெயருடன் சான்று பெற 2024ம் ஆண்டு வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: குழந்தை பிறந்து 15 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள பிறப்பு சான்றிதழில் பெயர் இடம் பெறாத பிறப்பு பதிவுகளுக்கு குழந்தையின் பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 2024ம் ஆண்டு வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்த ஒரு ஆண்டுக்குள் கட்டணமின்றியும், குழந்தை பெயரை பிறப்புப் பதிவேட்டில் பதிவு செய்த தேதியிலிருந்து ஒரு ஆண்டிற்கு மேல் ஆனால் காலதாமத கட்டணம் ரூ.200 செலுத்தி குழந்தை பெயர் பதிவு செய்து கொள்ளலாம். குழந்தை பிறந்து பதிவு செய்த தேதியிலிருந்து 15 ஆண்டுகளுக்குள் மட்டுமே பெயர் பதிவு செய்ய இயலும். 15 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்ய இயலாது.

தற்போது, 01.01.2000க்கு முன் பிறந்த பதிவு செய்யப்பட்ட பிறப்புகள் மற்றும் குழந்தை பிறந்து பதிவு செய்யப்பட்டு 15 ஆண்டுகள் பூர்த்தியான பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தையின் பெயர் பதிவு செய்ய வரும் 2024, டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் இந்திய தலைமை பதிவாளரால் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு குழந்தை பெயரை பதிவு செய்ய இயலாது. எனவே பொதுமக்கள் இந்த கால அவகாசத்தை பயன்படுத்திக் கொண்டு குழந்தை பெயர் வைத்து பிறப்புச்சான்று பெற்றுக் கொள்ளலாம் இது குறித்து தாலுகா அலுவலகத்தை அணுகி உரிய படிவத்தில் சான்றுடன் விண்ணப்பித்து ரூ.200 கால தாமத கட்டணமாகவும், சான்று நகல் ஒன்றுக்கு ரூ.200- செலுத்தி பிறப்புச்சான்று பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை