Saturday, September 7, 2024
Home » பறவை வேட்டை துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் பரிதாப பலி

பறவை வேட்டை துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் பரிதாப பலி

by Karthik Yash

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அடுத்த எண்ணை ஊராட்சிக்குட்பட்ட வேப்பவயல் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (19). இவர், நண்பர்களான சரவணன், ஆறுமுகம் ஆகியோருடன் நேற்று காலை அப்பகுதியில் உள்ள எரிச்சங்குளக்கரைக்கு பறவைகளை வேட்டையாட 2 நாட்டு துப்பாக்கிகளுடன் சென்றார். அங்கு துப்பாக்கியில் குண்டு வைத்து தயார்படுத்தி கொண்டு இருந்தனர். அப்போது ஒரு நாட்டு துப்பாக்கியில் இருந்து எதிர்பாராதவிதமாக வெளியேறிய குண்டு லட்சுமணன் மீது பாயந்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனடியாக நண்பர்கள் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே லட்சுமணன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து நண்பர்கள் ஆறுமுகம், சரவணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். லட்சுமணன் உடலில் எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் 36 பாதரச குண்டுகள் பாய்ந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

seven + 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi