அகமதாபாத் : வடகிழக்கு அரபிக்கடலில் உருவான பிபோர்ஜாய் புயல் இன்று மாலை 4 மணி முதல் 8 மணிக்குள் குஜராத்தில் சௌராஷ்ட்ரா மற்றும் கட்ச் பகுதியில் ஜக்காவ் துறைமுகம் அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மீட்பு பணிக்கான ராணுவம் மற்றும் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.