உயிர்வேதியியல் துறைத்தலைவர் புண்ணியக்கோட்டி வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் வெங்கடேசன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி வைத்து, கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார்.சிறப்பு விருந்தினராக சென்னை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உயிர் வேதியியல் துறை உதவி பேராசிரியர் மற்றும் சென்னை பல்கலைக்கழக மேனாள் கல்வி குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் கலந்துகொண்டு, புரொஜெக்டரின் மூலம் மாணவர்களுக்கு உயிர் வேதியியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கான தொழில்களும் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்ற வேலை வாய்ப்புகளை பற்றி விளக்கி பேசினார்.
தொடர்ந்து, கல்லூரியின் உயிர் வேதியியல் துறையில் சென்னை பல்கலைக்கழக தேர்வில், முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு, பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். நிகழ்வின் நிறைவாக உயிர் வேதியியல் சுஜாதா நன்றி கூறினார். இந்த கருத்தரங்கினில் கல்லூரி துணை முதல்வர் பிரகாஷ், பேராசிரியர்கள் ஆனந்தன், முனைவர் ஆறுமுகம், பி.ரேச்சல்மேரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.